search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி ஆணையர்"

    • மேய்ப்பவர் இன்றி தனியாக மாடுகளை திரிய விடக்கூடாது.
    • பொதுமக்களை மாடுகள் தாக்கும் சம்பவங்கள் நடைபெற்றால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சென்னையில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். படுகாயம் அடைந்த சிறுமி தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சாலையில் மாடு முட்டி பள்ளி சிறுமி படுகாயமடைந்ததையடுத்து, இதுபோல் இனி எந்த குழந்தைக்கும் நிகழக்கூடாது என்று சிறுமியின் தாத்தா வலியுறுத்தி உள்ளார்.

    இச்சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களை உருவாக்க வேண்டும்.

    மேய்ப்பவர் இன்றி தனியாக மாடுகளை திரிய விடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக சென்னையில் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாடுகளை வளர்க்க தேவையான அளவு இடம் இல்லாமல் தெருவை நம்பி வளர்க்கப்படும் மாட்டை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களை மாடுகள் தாக்கும் சம்பவங்கள் நடைபெற்றால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மக்கள் நெருக்கம் மிகுந்த அனைத்து தெருக்களிலும், மாடுகள் மற்றும் நாய்களின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
    • நாய்களின் தொல்லை காரணமாக மக்கள் தெருக்களில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை அரும்பாக்கம் பகுதியில் பள்ளி முடித்துவிட்டு தாயுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி மாடு முட்டி கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்தார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளை இணையதளத்தில் பார்க்கின்றபோது நெஞ்சம் பதை பதைக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமி பூரண குணமடைந்து விரைந்து இல்லம் திரும்ப வேண்டும். உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மக்கள் நெருக்கம் மிகுந்த அனைத்து தெருக்களிலும், மாடுகள் மற்றும் நாய்களின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், பம்மல், புரசைவாக்கம், பெரம்பூர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நாய்கள் மற்றும் மாடுகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. நாய்களின் தொல்லை காரணமாக மக்கள் தெருக்களில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நாய்கள் அங்குமிங்கும் குறுக்கே செல்வதன் காரணமாக பல விபத்துகள் ஏற்பட்டு மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சிலர் நாய்க் கடிக்கு ஆளாகி சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மாடுகள் தெருக்களில் சுற்றித் திரிவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகள் மற்றும் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவில்லையெனில், மனிதர்கள் படுகாயமடைவதும், உயிரிழப்பதும் தொடர் கதையாகிவிடும்.

    எனவே முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தெருக்களில் மாடுகள் மற்றும் நாய்கள் நடமாட்டத்தை முறைப் படுத்தவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாடு முட்டி சிறுமி படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக, மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மாட்டுக்கு வேறு ஏதேனும் வெறி பிடித்த நோய் உள்ளதா? என கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னையில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். படுகாயம் அடைந்த சிறுமி தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சாலையில் மாடு முட்டி பள்ளி சிறுமி படுகாயமடைந்ததையடுத்து, இதுபோல் இனி எந்த குழந்தைக்கும் நிகழக்கூடாது என்று சிறுமியின் தாத்தா வலியுறுத்தி உள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், தற்போது சிறுமி நலமுடன் இருக்கிறார். தலையில் 4 தையல் போடப்பட்டுள்ளது. உடம்பில் காயங்கள் உள்ளது. சிறுமி அதிர்ச்சியில் உள்ளார். கண் சிவந்து காணப்படுகிறது என்று கூறினார்.

    சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில் சென்னையில் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    மாடு முட்டி சிறுமி படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக, மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 மாடுகளும் பிடிக்கப்பட்டு அதற்கென உரிய மாட்டு தொழுவத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. மாட்டுக்கு வேறு ஏதேனும் வெறி பிடித்த நோய் உள்ளதா? என கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கால்நடை பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்படும்.

    மாடுகளை வளர்க்க தேவையான அளவு இடம் இல்லாமல் தெருவை நம்பி வளர்க்கப்படும் மாட்டை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்களை மாடுகள் தாக்கும் சம்பவங்கள் நடைபெற்றால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படைத்தன்மைச் சட்டம் 1998ன் படி மூன்று நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகள் பெறப்பட்டது.
    • பெறப்பட்ட தளவாடப் பொருட்கள் நான்கு மண்டலங்களுக்கு வழங்கப்பட்டு தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு தளவாடப்பொருட்கள் தேவைப்படுவதாக சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்களிடமிருந்து 21.4.2022அன்று அறிக்கை பெறப்பட்டது, அதன்படி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படைத்தன்மைச் சட்டம் 1998ன் படி மூன்று நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகள் பெறப்பட்டது.

    மூன்று நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளிகளின் அடிப்படையில், தளவாடப் பொருட்களுக்கான உத்தேச மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, மாநகராட்சி ஆணையாளரின் நிர்வாக அனுமதி பெறப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோர உரிய அரசு வழிகாட்டுதலின்படி, 17.5.2022 அன்று ஒரு நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டு 30.5.2022 அன்று இ-டெண்டர் இணையவழியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

    மேற்படி ஒப்பந்தப் புள்ளிகளில் இரண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு ஒப்பந்தப்புள்ளி வழங்கியுள்ளனர்.மேற்கண்ட இரண்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளிகளின்படி ஒப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி ஆய்வுக்குழுவின் அறிக்கை பெறப்பட்டு மாமன்றத்தின் தீர்மானத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

    அதன்படி குறைவான ஒப்பந்தப்புள்ளி வழங்கிய நிறுவனத்திற்கு விநியோக உத்தரவு வழங்கப்பட்டது. மேற்படி ஒப்பந்ததாரர் ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தளவாடப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. பெறப்பட்ட தளவாடப் பொருட்கள் நான்கு மண்டலங்களுக்கு வழங்கப்பட்டு தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தளவாடப்பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக சிலர் சமூகவலைதளங்களில் தகவல்களை பரப்பினர். இதையடுத்து மேயர், ஆணையாளர், துணைமேயர் மற்றும் மாநகர நல அலுவலர் ஆகியோர் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள், தொடர்புடைய கோப்புகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு எவ்வித விதிமீறல்களும் நடைபெறவில்லை எனவும், முறையாக வழிமுறைகளைப் பின்பற்றி பெறப்பட்டது என உறுதி செய்யப்பட்டது.

    எனவே சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட பொருளுக்கும், விநியோகம் செய்யப்பட்ட பொருளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை . இது போன்ற உண்மைக்குப் புறம்பான தவறான தகவல்களை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாக சொத்துவரி கருதப்படுகிறது.
    • தகவல்களுக்கு 155304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர்பவன்குமார் ஜி.கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாக சொத்துவரி கருதப்படுகிறது. சொத்துவரி, தொழில்வரி போன்ற வரிகள் மூலம் பெறப்படும் வருவாயினை கொண்டு, திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தூய்மைப் பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், பொது மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குதல் போன்ற சேவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 31.12.2022ல் சொத்துவரி ரூ. 50.73 கோடி, காலியிட வரி ரூ. 1.75 கோடி, தொழில் வரி ரூ.2.21 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.11.84 கோடி, வாடகை - குத்தகை இனங்கள் ரூ.3.56 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 46 லட்சம் என மொத்தம் ரூ. 79.13 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 31.1.2023ல் சொத்துவரி ரூ. 66.47 கோடி, காலியிட வரி ரூ. 1.99 கோடி, தொழில் வரி ரூ.2.53 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.15.66 கோடி, வாடகை -குத்தகை இனங்கள் ரூ.3.66 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 58 லட்சம் என மொத்தம் ரூ. 101.83 கோடி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

    அதன்படி 16.2.2023ல் சொத்துவரி ரூ. 73.66 கோடி, காலியிட வரி ரூ. 2.12 கோடி, தொழில் வரி ரூ. 3.20 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.17.68 கோடி, வாடகை - குத்தகை இனங்கள் ரூ. 3.68 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 64 லட்சம் என மொத்தம் ரூ. 13.58 கோடி பொது மக்கள் கட்டணங்களாக செலுத்தியுள்ளனர்.

    மேற்கண்ட தகவலின்படி டிசம்பர் 2022 ல் 36.36 சதவீதமும், ஜனவரி 2023ல் 44.22 சதவீதமும் பிப்ரவரி 2023 நாளது வரை 47.96 சதவீதமும் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வரி, வாடகை மற்றும் குத்தகை இனங்கள் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்கள் விடுமுறை நாட்களில் வரி செலுத்த ஏதுவாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் ஆகிய கணிணி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாக செலுத்தமேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் தகவல்களுக்கு 155304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எளிய முறையில் இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தும் சேவையை பயன்படுத்த.Use "Quick Payment" or "Register & Login" tohttps://tnurbanepay.tn.gov.in. மேலும்,அனைத்து மண்டலங்களிலும் சொத்துவரி மற்றும் காலியிடவரி வரி விதித்தல் தொடர்பிலும், பெயர் மாறுதல்கள் செய்தல் தொடர்பிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன.
    • நடப்பு நிதியாண்டில் சொத்து வரி ரூ. 83.34 கோடி நிலுவை உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், காலியிடங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியன மாநகராட்சிக்கு பல்வேறு இனங்களில் வரி செலுத்துகின்றன. இவை தவிர மாநகராட்சி கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் ஏலம், குத்தகை அடிப்படையில் உரிமம் பெற்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    நடப்பு நிதியாண்டில் சொத்து வரி ரூ. 83.34 கோடி நிலுவை உள்ளது. காலியிட வரியில் ரூ. 7.97 கோடி, தொழில் வரி ரூ.3.30 கோடி,குடிநீர் கட்டணம்ரூ. 18.81 கோடி, குத்தகை இனத்தில் ரூ. 15.05 கோடி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் ரூ. 13.61 கோடி மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ. 1.81 கோடி நிலுவை உள்ளது. மொத்தம் 143.89 கோடி ரூபாய் வரியினங்கள் நிலுவையில் உள்ளது. பல கோடி ரூபாய் வரிகள் செலுத்தப்படாமல் உள்ளன. நிர்வாகத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டப்பணிகள்,குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, அலுவலக பராமரிப்பு மற்றும் ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், ரோடுகள் பராமரிப்பு, கடன்களுக்கான வட்டி, தவணை செலுத்துதல் என மாநகராட்சி நிர்வாகம் கடுமையாகத் தள்ளாடிக் கொண்டுள்ளது.

    எனவே மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய வகையில் பொதுமக்கள் செலுத்தி சீரான நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என கமிஷனர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். வரி செலுத்துவோர் வசதிக்காக மைய அலுவலகம், வரி வசூல் மையங்கள் ஆகியன ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தவிர அனைத்து நாட்களிலும் காலை 9:30 மணி முதல் மாலை5 மணி வரை செலுத்தலாம். மேலும் ஆன்லைன் வாயிலாகhttps://tnurbanepay.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
    • வாக்காளர்கள் இணையதளத்தில் மற்றும் செயலி மூலமாக தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    இந்திய தேர்தல் ஆணையம் வருகிற 31-3-2023-க்குள் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் விவரங்களுடன் ஆதார் எண் விவரங்களை இணைக்க வழிவகை செய்துள்ளது. வாக்காளர்களின் விருப்பத்தின்படி ஆதார் எண் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த 1-ந் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலமாக ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரெ தொகுதிக்குள், ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியில் இடம்பெறாமல் தவிர்க்க முடியும். வாக்காளர்கள் இணையதளத்தில் NVSP மற்றும் voter portal மூலமாகவும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம். மாறாக வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆதார் எண் இணைப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கலாம்.

    இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் இணைப்பு தொடர்பாக படிவம் 6B என்ற விண்ணப்ப படிவத்தை அறிமுகம் செய்துள்ளது. சிறப்பு முகாமில் படிவம் 6B யை பூர்த்தி செய்து ஆதார் எண்ணை இணைத்து விண்ணப்பிக்கலாம். ஆதார் எண் இல்லாதவர்கள் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி, அஞ்சலக புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட அட்டை, கடவுசீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, சமூக நலத்துறையினரால் வழங்கப்பட்ட தனி அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ, இணையதளம் மூலமாக ஆதார் எண்ணை இணைக்கலாம். இந்த தகவலை தெற்கு தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரான மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். 

    ×